தாராபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் கடித போட்டி- கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: கல்லூரி மாணவிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்திய அஞ்சல் துறை 2023-24 நிதி ஆண்டிற்கான தேசிய அளவிலான தாய் அகர்‌ கடிதம் எழுதும் பிரச்சாரத்தை புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தாய் அகர் என்பது தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள (மகாராணி) தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதினர்.



தாராபுரம் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்லேண்ட் லெட்டர் என்வெலப் போன்ற தபால்களை தலைமை தபால் நிலையத்தின் மூலம் Chief Postmaster General Chennai 600002 என்ற முகவரிக்கு அனுப்பினர்.



இந்நிகழ்ச்சியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கடிதம் எழுதும் பணியை ஆய்வு செய்தனர்.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...