விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முத்தையன் கோவிலில் வழிபாடு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள விவசாயி முத்தையன் கோவிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மலர்தூவி வழிபாடு நடத்தினர்.


: திருப்பூர்: ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவசாயி முத்தையனின் கோவிலில் சிறப்பு பூஜை.

குண்டடம் அடுத்துள்ள வெருவேடம்பாளையத்தில் ஆங்கிலேயனுக்கு வரிகொடுக்க மறுத்ததால், ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவசாயி முத்தையனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு யாத்திரை குழுவினர் வந்தனர்.



அவர்களை வெருவேடம்பாளையம் கிராம மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து அக்குழுவினர் முத்தையன் கோவிலில் சூடம் எற்றி, மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பீமராவ் முத்தையனின் வரலாற்றை விவரித்து பேசியதோடு யாத்திரையின் நோக்கங்களையும் விளக்கிப் பேசினார். இதில் மாநில இணை அமைப்பாளர் சிவபிரபாகர், மாநில பொருளாளர் பாலு, மாநில பொருப்பாளர் கணேஷ்பாபு, கோட்ட அமைப்பாளர் சேனாதிபதி, மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொருப்பாளர் தமிழ்செல்வன், பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு மேலாண்மை பிரிவின் குண்டடம் ஒன்றிய தலைவர் வேலுசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...