ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு - கோவை ஆட்சியர்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மையநிர்வாகி, முதுநிலைஆலோசகர், வழக்குபணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) ல் ஒப்பந்த அடிப்படையில் மையநிர்வாகி, முதுநிலைஆலோசகர், வழக்குபணியாளர், தகவல் தொழில் நுட்ப பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட இணையதள முகவரி https://coimbatorenic.in யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நகஅலுவலகம், மாவட்டஆட்சியரகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோயம்புத்தூர்- 641018. தொலைபேசிஎண்- 0422 2305126 என்ற முகவரிக்கு 30.10.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...