கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வராமல் சென்ற 2 அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அபராதம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை அருகே பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளை நிறுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், மேம்பாலத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

ஒரு சில பேருந்துகள் கருமத்தம்பட்டியில் நிற்காது என்று கூறி பயணிகளை ஏற்ற மறுத்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் சூலூர் வட்டார போக்குவத்து அதிகாரி சண்முகசுந்தரம் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தின் வழியாக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தள்ளிச்சென்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது தெரியவந்தது.



உடனே சம்பந்தப்பட்ட அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்தார்.

மேலும் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...