சீரான மின்சாரம் கேட்டு ஜல்லிப்பட்டி ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளை சார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.


திருப்பூர்: பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மனுவாக கொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளைசார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மனுகொடுக்கப்பட்டது. ஜல்லிபட்டி புதுக்காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகிறது.



தொடர்ச்சியாக தரமற்ற மின்விநியோகத்தால் லோவேல்டேஜில் மின்சாரம் வருவதால் பேன் மிக்சி கிரைண்டர் அயர்ன்பாக்ஸ் உட்பட வீட்டுமின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் மின்கம்பத்தில் மேல்நிலைக்கம்பிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே சீரான மின்சாரம் வழங்கிடவும் மேல்நிலைகம்பிகளை பராமரித்து மக்ககளுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி இந்தியஜனநாயக வாலிபர்சங்ம் சார்பில் பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்துபெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனுகொடுத்து பேசப்பட்டது.



உடனடியாக சரிசெய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் DYFI உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, அஜித்குமார், சுரேஸ், சின்னகருப்புசாமி, கன்னிமுத்து, முருகேஸ் ரவி, கார்த்திக் உட்பட கிளைநிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...