இ-பைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறை கீழமை நீதிமன்றங்களில் நடைமுறை படுத்துவதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொதுமக்களுக்கும் தங்களுக்கும் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் இ-பைலிங் முறையை கைவிட்டு பழைய நடைமுறையை கொண்டு வர வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது, இ பைலிங் நடை முறைக்கு குறித்து நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில், இ-பைலிங் முறை அமல் படுத்தபட்டு இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அடிக்கடி சர்வர் பிரச்சனை ஏற்படுவதால் இ பைலிங் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும், வழக்கமான நடைமுறையுடன். இ-பைலிங் முறையும் அமல்படுத்த வேண்டும் என்றும், இ-பைலிங் முறையில் இருக்கும் சிக்கல்கள் சரி செய்த பின் அதை முழுமையாக அமல்படுத்தலாம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே நீதிமன்றங்களில் போதிய ஆட்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் நிலையில் இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் இது இருப்பதால் இ-பைலிங் முறையுடன், பழைய நடைமுறையினையும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...