பழமுதிர் நிலையம் நிறுவனர் சின்னசாமி-க்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் தொழில் சார் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


பழமுதிர் நிலையம் நிறுவனர் சின்னசாமி-க்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் தொழில் சார் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.



கோவை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர்-ன் தலைவர் குர்ப்ரீத் சிங் முன்னிலை வகித்தார். பாரதிய வித்யா பவன் பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சின்னசாமி-க்கு விருதினை வழங்கி கவுரவித்தார் . 



தொடர்ந்து பழமுதிர் நிலைய நிறுவனர் சின்னசாமி பேசுகையில், 'என் போன்ற குறுந்தொழில் முனைவோருக்கும் விருது வழங்கி கவுரவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.



தொடர்ந்து கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:- 

ஒவ்வொரு சாதனையாளரையும் பாராட்டி அதன் வாயிலாக மகிழ்ச்சியடைவது பாரட்டுதலுக்குரியது. அதனை ரோட்டரி க்ளப் செம்மையாக செய்து வருகிறது. எந்த சமூகம் ஒவ்வொருவரின் வெற்றியையும் பாராட்டுகிறதோ அந்த சமூகம் தான் நல்ல நிலையை அடையும்.  இன்றய காலகட்டத்தில் வழங்கப்படும் சில விருதுகளுக்கு விலை உள்ளது. ஆனால், ரோட்டரி க்ளப் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு எந்த விலையும் இல்லை. உண்மையும், உழைப்புமே விருதுக்கான விலை. அதற்கு உதாரணம் இன்று சின்னசாமிக்கு வழங்கப்படும் விருது. ஆரம்பகாலகட்டத்தில் தள்ளு வண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் நடத்தி இன்று பெரிய அளவில் வளர்ந்து, தன் நிறுவனத்திற்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வைத்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் அவருக்கு யாருடைய துணையும்  இல்லை. உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவரை இந்த நிலைக்கு  வளர்த்துள்ளது. இளைஞர்களுக்கு சின்னசாமி போன்றோரின் சாதனைகள் தெரிய வேண்டும். அப்போது தான் அனைவராலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களுக்கு கிடைக்கும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...