கோவை மாவட்ட மகளிர் கால்பந்து போட்டி- நிர்மலா கல்லூரி முதலிடம்

கோவை மாவட்ட கால்பந்து சங்க பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மைக்கேல் காப் கல்லூரியை விழத்தி நிர்மலா கல்லூரி கோப்பையை வென்றது.


கோவை: கோவையில் மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிர் கால்பந்து போட்டியில் நிர்மலா கல்லூரி முதல் இடம் பிடித்தது.

கோவை மாவட்ட கால்பந்து சங்க, பெண்கள்‌ கால்பந்து சுழற்கோப்பை ஓபன்‌ கேட்டகரி 9.10.2023 மறறும்‌ 10.10.2023 ஆகிய இரண்டு நாட்கள்‌ குமரகுரு பன்முகக்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெற்றது. இதனுடைய இறுதிப்போட்டி மற்றும்‌ பரிசளிக்கும்‌ விழா 10.10.2023 அன்று மாலை 4 மணியளவில்‌ குமரகுரு கால்பந்து விளையாட்டு மைதானத்தில்‌ நடைபெற்றது. நாக்‌ அவுட்‌ முறையில்‌ நடநத இப்போட்டியில்‌ 14 அணிகள்‌ பங்கேற்று விளையாடின.

தகுதிச்சுற்று ஆட்டங்களில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அணிகளுக்கு இடையே போட்டிகள்‌ நடத்தப்பட்டு இறுதியாக 4 அணிகள்‌ முதல்‌ நான்கு இடங்களைப்‌ பெற்றது.

நிர்மலா மகளிர்‌ கல்லூரி 3-0 என்ற கோல்‌ கணக்கில்‌, மைக்கேல்‌ ஜாப்‌ கல்லூரியை வென்று முதல்‌ இடத்தை பிடித்தது. இரண்டாம்‌ இடத்தை COLDS GH ஜாப்‌ கல்லூரியும்‌ செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிக்குலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி முறையே ஏ, பி அணிகளாக மூன்றாம்‌, நான்காம்‌ இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. முதல்‌ இடத்தை தட்டிச்சென்ற நிர்மலா மகளிர்‌ கல்லூரிக்கு ரொக்க பரிசு ரூ.5000 மறறும்‌ கேடயமும்‌ இரண்டாம்‌ இடத்தை பெற்ற மைக்கேல்‌ ஜாப்‌ கல்லூரிக்கு ரூபாய்‌ 3000 ரொககபரிசும்‌ , கேடயமும்‌ மூனறாம்‌ இடத்தை பிடித்த செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி ஏ அணிக்கு ரொக்கபரிசு ரூபாய்‌ 2000, கேடயம்‌ வழங்கப்பட்டது. நான்காம்‌ இடம்‌ பிடித்த செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி பி அணிக்கு கேடயம்‌, சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர்‌ முனைவர்‌. பேராசிரியர்‌.அஜீத்குமார்‌ லால்‌ மோகன்‌, பரிசுகளையும்‌ கேடயங்களையும்‌ சான்றிதழ்களையும்‌ வழங்கி கெளரவித்து சிறப்புரையாறறினார்‌.

குமரகுரு கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌.விஜிலா எட்வின்‌ கென்னடி வெற்றிபெற்ற வீரர்களை வாழ்த்தினார்‌.

கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர்‌ .கிருஷ்ணமூர்த்தி மறறும்‌ உறுப்பினர்கள்‌ உடனிருந்தனர்‌.

இப்போட்டிகளில்‌ கால்பந்து வீராங்கனைகள்‌ ஆர்வமுடன்‌ கலந்துகொண்டு விளையாடினர்‌. விளையாட்டு ஆர்வலர்கள்‌ வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்‌.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...