கல்வி மட்டுமல்ல விளையாட்டிலும் மாணவர்கள் வெற்றி - பார்க் கல்வி குழுமத்திற்கு அமைச்சர் முத்துசாமி புகழாரம்

கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் மாணவர்கள் வெற்றி பெற பார்க் கல்வி குழுமம் ஊக்குவிப்பதாக அக்கல்வி குழுமத்தின் விழாவில் அமைச்சர் முத்துசாமி புகழாரம் சூட்டினார்.


கோவை: ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று பார்க் கல்வி குழுமம் விழாவில் அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார்.

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழுமத்தின் விழாவில் அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பார்க் கல்வி குழுமம் மற்றும் ரைசிங் சன் ஈவென்ட்ஸ் நடத்திய கோவை சாம்பியன்ஸ் T 20 கிரிக்கெட் போட்டியானது கடந்து அக்டோபர் 03 ஆம் தேதி துவங்கி அதன் இறுதி போட்டி 05 அக்டோபர் 2023 அன்று கணியூர் வளாகத்தில் நடை பெற்றது.

விளையாட்டு போட்டிகளில் 24 அணிகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. இதன் இறுதி போட்டியில் ARS அகாடமி அணி கோப்பையை வென்றது. இந்த சாம்பியன்ஷிப் ஆட்டத்தின் பரிசளிப்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி வரவேற்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி பரிசளித்தார். பின்னர் அவர் பேசியாதவது, மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டுமென்றுமென்று நமது முதலமைச்சர் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

அதுபோல பார்க் கல்வி குழுமம் தனது மாணவர்களை விளையாடிலும் மேன்மையடைய செய்வது சிறப்பு என்று வாழ்த்தினார். மாணவர்களின் திறனை பெற்றோரைவிட ஆசிரியர்களே நன்கு அறிவார்கள். ஆகவே ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று அறிவுறுத்தினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுக்கு வந்தது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...