உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 5 முதல் 12 -ம் தேதி வரையில் தகவல் அறியும் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை யொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா தொடங்கி வைத்தார். தமிழ் ஆசிரியர்கள் வே. சின்னராசு, ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...