டாஸ்மாக் கடைக்கு வலுக்கும் எதிர்ப்பு - தாராபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல்

தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி டாஸ்மார்க் மதுபான கடையை முற்றுகையிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம்_பூளவாடிசாலை தேர்பாதை பகுதியில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.



தேர்பாதை சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் டாஸ்மார்க் மதுபான கடையை அகற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி டாஸ்மார்க் மதுபான கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம்-பூளவாடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் மாற்றப்பட்டுள்ளது.



சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் தனி வட்டாட்சியர் ஜெகஜோதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.



சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இவ்வழியாக சென்றபோது பொதுமக்கள் அமைச்சரிடம் இப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதால் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் மனு அளித்தும் டாஸ்மாக் கடையை அகற்ற இன்று வரை யாரும் கண்டு கொள்ளாததால் கடையை அகற்றும் வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...