நாடகங்கள் நடத்த இலவச அரங்குகள் தேவை - நாடக கலைஞர்கள் கோரிக்கை

நாடகங்கள் நடத்துவதற்கு அரசுக்கு சொந்தமான அரங்கங்களை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும் என கோவையில் நாடக கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கோவை: நாடகம் பார்ப்பதில் குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவருவதாக நாடக கலைஞர்கள் வேதனை

பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடந்த அக்., மாத நிகழ்ச்சியில், காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின், ஜூகல்பந்தி நகைச்சுவை நாடகம் நடந்தது.அதில், பங்கேற்ற நடிகர், நாடக கலைஞருமான காத்தாடி ராமமூர்த்தி, நிருபர்களிடம் கூறும் போது, தற்போது சபாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில், 160 - 170 சபாக்கள் வரை இருந்தன. தற்போது, 12 சபாக்களாக குறைந்துள்ளன; இரண்டு சபாக்கள் சேர்ந்து நாடகம் நடத்தும் சூழல் உள்ளது.நாடகத்தின் வளர்ச்சி குறையவில்லை. பார்க்க வரும் ரசிகர்கள், 40 - 50 வயதானவர்களாக உள்ளனர்; இளைஞர்கள், குழந்தைகள் வருவதில்லை. 'டிவி', மொபைல்போன் உள்ளிட்ட நவீன வளர்ச்சியாக கூட இருக்கலாம். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் வர வைக்க, சிறந்த நாடகம் தயார் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.

ஒருமுறை அவர்கள் நாடகம் பார்த்தால், பிடித்து தொடர்ந்து பார்க்க துவங்குவர்.நாடகம் தான் அனைத்து கலைகளுக்கும் முன்னோட்டமான தாய். இதில் இருந்து தான் பல கலைகள் உருவாகின.தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில், அரசு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான அரங்கங்களை, குறைந்த வாடகைக்கு அல்லது இலவசமாக நாடகம் நடத்த வழங்கலாம். இதன், வாயிலாக நாடக கலை வளரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...