நாடகங்கள் நடத்த இலவச அரங்குகள் தேவை - நாடக கலைஞர்கள் கோரிக்கை

நாடகங்கள் நடத்துவதற்கு அரசுக்கு சொந்தமான அரங்கங்களை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும் என கோவையில் நாடக கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கோவை: நாடகம் பார்ப்பதில் குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவருவதாக நாடக கலைஞர்கள் வேதனை

பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடந்த அக்., மாத நிகழ்ச்சியில், காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின், ஜூகல்பந்தி நகைச்சுவை நாடகம் நடந்தது.அதில், பங்கேற்ற நடிகர், நாடக கலைஞருமான காத்தாடி ராமமூர்த்தி, நிருபர்களிடம் கூறும் போது, தற்போது சபாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில், 160 - 170 சபாக்கள் வரை இருந்தன. தற்போது, 12 சபாக்களாக குறைந்துள்ளன; இரண்டு சபாக்கள் சேர்ந்து நாடகம் நடத்தும் சூழல் உள்ளது.நாடகத்தின் வளர்ச்சி குறையவில்லை. பார்க்க வரும் ரசிகர்கள், 40 - 50 வயதானவர்களாக உள்ளனர்; இளைஞர்கள், குழந்தைகள் வருவதில்லை. 'டிவி', மொபைல்போன் உள்ளிட்ட நவீன வளர்ச்சியாக கூட இருக்கலாம். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் வர வைக்க, சிறந்த நாடகம் தயார் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.

ஒருமுறை அவர்கள் நாடகம் பார்த்தால், பிடித்து தொடர்ந்து பார்க்க துவங்குவர்.நாடகம் தான் அனைத்து கலைகளுக்கும் முன்னோட்டமான தாய். இதில் இருந்து தான் பல கலைகள் உருவாகின.தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில், அரசு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான அரங்கங்களை, குறைந்த வாடகைக்கு அல்லது இலவசமாக நாடகம் நடத்த வழங்கலாம். இதன், வாயிலாக நாடக கலை வளரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...