ரயிலில் பெட்ரோலுடன் இருசக்கர வாகனம் அனுப்பிய வாலிபர் கைது

ரயிலில் பெட்ரோலுடன் இருசக்கர வாகனத்தை அனுப்பிய வாலிபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கன்னியாகுமரி செல்வதற்கான ரயிலில் பெட்ரோலுடன் பார்சல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்

புனே-கன்னியாகுமரி ரயில் கர்நாடக மாநிலம் கலபுரகி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவைக்கு வந்தது.

அந்த ரயிலில் பார்சல் சேவை மூலம் கொண்டு வரப்பட்ட பைக்கை, பார்சல் அலுவலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.அப்போது அந்த பைக்கில், பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கோவை ரயில்வே பாதுகாப்பு படையில் புகார் அளித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.அதில் பெட்ரோலுடன் பைக்கை அனுப்பி வைத்தது, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், 25, என்பது தெரிந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சித்தேஸ்வரன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...