தேசிய அஞ்சல் வாரம் - கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியர்கள் கொண்டாட்டம்

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியார்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் அஞ்சல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கோவையில் உள்ள வெவ்வேறு அஞ்சல் அலுவலகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால் தலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அஞ்சல் அலுவலகம் வந்திருந்தனர்.



இவர்கள் அஞ்சல் துறையினர் செயல்பாடுகள், அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால்தலைகளை பார்வையிட்டனர்.



மேலும் அஞ்சல் ஊழியர்கள் கேக் வெட்டி, கோலமிட்டு கொண்டாடினர். அஞ்சலக ஊழியர்கள் மாணவர்களுக்கு அஞ்சல் உறைகளை வழங்கி கடிதம் எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்து தெரிவித்தனர்.

அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...