தேசிய அஞ்சல் வாரம் - கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியர்கள் கொண்டாட்டம்

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியார்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் அஞ்சல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கோவையில் உள்ள வெவ்வேறு அஞ்சல் அலுவலகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால் தலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அஞ்சல் அலுவலகம் வந்திருந்தனர்.



இவர்கள் அஞ்சல் துறையினர் செயல்பாடுகள், அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால்தலைகளை பார்வையிட்டனர்.



மேலும் அஞ்சல் ஊழியர்கள் கேக் வெட்டி, கோலமிட்டு கொண்டாடினர். அஞ்சலக ஊழியர்கள் மாணவர்களுக்கு அஞ்சல் உறைகளை வழங்கி கடிதம் எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்து தெரிவித்தனர்.

அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...