கோவையில் அரிய வகை வெள்ளை நிற நாகபாம்பு - பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் அரிய வகை நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது.


கோவை: தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கிருந்த வெள்ளை நிற நாகபாம்பை, பாம்பு பிடி வீரர் மோகன் என்பவர், பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தொட்டியில் வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கிருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து, தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கு சென்ற பாம்புபிடி வீரர் மோகன் அந்த அந்த பாம்பை பார்க்கும் போது அந்த பாம்பானது பார்சியல் ஆல்பினோ என்ற மரபணு குறைப்பாட்டால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கப்படும் பாம்பு என்பது தெரியவந்தது.



பின்னர் அந்த இரண்டடி நீளம் கொண்ட பாம்பை பத்திரமாக பிடித்த மோகன் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தார். கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டது. தற்போது மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டிருக்கின்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...