கலைஞர் கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

திருப்பூர் அருகே உள்ள நீர் நிலை தன்மை கொண்ட நிலங்களை மீட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க கோரி சென்னை தலைமை செயலகம் முன்பாக வரும் 12ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக நஞ்சராயான் குளம் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர்


திருப்பூர்: நீர்நிலைத் தன்மை கொண்ட நிலங்களை மீட்க வேண்டும். அதில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து நஞ்சராயான் குளம் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய குளமான நஞ்சராயன் குளம் 440 ஏக்கரில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு 800 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இந்த குளத்தில் 157 வகை பறவை இனங்களும் 40 வகை பட்டாம்பூச்சிகளும் 76 வகை தாவரங்களும் 11 வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் 16 வகை பூச்சிஇனங்களும் வாழ்விடமாகவும், வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து செல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது.

இதனிடையே நஞ்சராயன் குளத்தை 17வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆட்சி காலத்தில் இந்த குளத்தை ஒட்டி உள்ள தனியார் பள்ளிக்கு முறைகேடாக வழங்கிய 8.90 ஏக்கர் நீர்நிலைத் தன்மை கொண்ட நிலங்களை மீட்க வேண்டும். அதில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னையில் தலைமை செயலகம் முன்பு வரும் 12ம் தேதி முதல் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...