திருச்செந்தூர் குழந்தை கடத்தல் - கடத்தி சென்ற பெண் உயிரிழப்பு?

திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: திருச்செந்தூரில் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட கணவன், மனைவி கைது.

கடந்த 5ம் தேதி திருசெந்தூர் வடக்கு டோல்கேட் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் ஒன்றரை வயது திருடப்பட்டது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலிசார்க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில் உடனடியாகக் கோவை ஆலாந்துறை போலிசார்க்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் ஆலாந்துறை போலிசார் பூண்டி சாலை முட்டதுவையல் குளத்தேரி பகுதியில் இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(43), திலகவதி(35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறிய நிலையில் தற்போது காவல்துறையினர் சேலம் விரைந்துள்ளனர். மேலும் திருச்செந்தூர் காவல்துறையினரும் சேலம் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் திலகவதி தற்போது உயிரிழந்துள்ளார். விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...