மதுரை முதன்மை சுகாதார அலுவலருக்கு எதிர்ப்பு - கோவையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு பாதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


கோவை: மருத்துவர்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஆணைகள் பிறப்பிக்கும் வரை போராட்டத்தை தொடர்வது என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்தனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தி வந்தனர்.அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு பாதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.



மதுரை சுகாதார அலுவலரின் பணியிடை நீக்கம், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமை, மகப்பேறு மரண தணிக்கை பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தது குறித்து முதன்மை சுகாதார அலுவலர் அத்துமீறி உள்ளே நுழைந்து இது சம்பந்தமாக மருத்துவர்களை மிரட்டி உள்ளார்.

மதுரை முதன்மை சுகாதார அலுவலர் மீது மருத்துவமனை நிர்வாகமும்,சுகாதாரத் துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

முதன்மை சுகாதார அலுவலர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 6 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 2 மருத்துவர்களை வைத்து இரவு பகலாக வேலை வாங்குவதாக சுகாதார துறை மீது குற்றம் சாட்டினர்.

மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் மருத்துவத்தை தவிர மற்ற வேலைகளை அரசு இவர்களைச் செய்யச் சொல்லி கட்டாயபடுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் மகப்பேறு மருத்துவர்கள் அதிக அளவில் மன உளைச்சலில் உள்ளதாகவும் 40 மணி நேரம் செய்யக்கூடிய வேலையை 80 மணி நேரமாக செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாக கூறினார்.

போராட்டங்களுக்குப் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து அக்டோபர் 16-ம் அன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...