திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடிப்பு - 5 பேர் காயம்

திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பாராபாளையம் அடுத்த வடக்கு தோட்டம் பகுதியில் ஜெயரத்தினம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மங்களூரைச் சேர்ந்த பிரதீப் செட்டி. இந்த நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். அப்பொழுது, அயனிங் செக்சன் இன்சார்ஜ், மணிகண்டன் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் உற்பத்தி செய்த பனியன்களை அயன் செய்வதற்காக அயனிங் பாயிலரை ஆன் செய்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அயனிங் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கண்ணதாசனுக்கும், குமார் வலது புறம் நெத்தியில அங்கு பணியாற்றிய வட மாநில தொழிலாளி பாபு நரேன் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மணிகண்டன் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் அருகில் இருந்த இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் காயம் பட்டவர்களை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...