திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடிப்பு - 5 பேர் காயம்

திருப்பூரில் தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: தனியார் பனியின் நிறுவனத்தில் அயணிங் ஸ்டீம் பாயிலர் வெடித்து சிதறிய விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பாராபாளையம் அடுத்த வடக்கு தோட்டம் பகுதியில் ஜெயரத்தினம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மங்களூரைச் சேர்ந்த பிரதீப் செட்டி. இந்த நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். அப்பொழுது, அயனிங் செக்சன் இன்சார்ஜ், மணிகண்டன் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் உற்பத்தி செய்த பனியன்களை அயன் செய்வதற்காக அயனிங் பாயிலரை ஆன் செய்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அயனிங் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கண்ணதாசனுக்கும், குமார் வலது புறம் நெத்தியில அங்கு பணியாற்றிய வட மாநில தொழிலாளி பாபு நரேன் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மணிகண்டன் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் அருகில் இருந்த இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் காயம் பட்டவர்களை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...