அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் - கோவையில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய பாமகவினர்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக பாமகவினர் வழங்கினர்.


கோவை: அன்புமணி ராமதாசின் பிறந்தாளை பாட்டாளி மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.

நாடாளுமன்ற உருப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார். அவரது பிறந்தநாளை பாட்டாளி பிறந்தநாளினை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.



பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையிலான பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செல்வபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் உட்பட கோவை மாநகரில் மூன்று முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டாடினர்.



மேலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உள்ள பல தரப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு மாரடைப்பு வந்தால் உடனடியாக உட்கொள்ள வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள்( Loading dose) வழங்கினர்.

இது குறித்து கோவை பாமக கிழக்கு மாவட்ட் செயலாளர் கோவை ராஜ் கூறுகையில் உயிர் காக்கும் மருந்துகள் தனிப்பட்ட முறையில் வாங்க வேண்டும் என்றால் சுமார் 75 ரூபாய் வருகிறது இந்த மருந்துகளை டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையிலே முக்கிய இடங்களிலே இலவசமாக மருந்துகள் வழங்கி வருகின்றோம் இன்று மட்டும் 300 பேருக்கு மருந்து இலவசமாக வழங்கப்படுகின்றது அடுத்த கட்டமாக ஒவ்வொரு பகுதிகளாக சென்று எல்லோருக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கிட உள்ளோம் என்று தெரிவித்தனர். இதில் கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ், மகளிர் அணி செயலாளர் கெளசல்யா, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மடத்தூர் ரமேஷ் மற்றும் கோபி உள்ளிட்ட பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...