தாராபுரத்தில் இறைச்சிக் கடைக்குள் கார் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கட்டுப்பாட்டை இழந்து இறைச்சிக்கடைக்குள் கார் புகுந்த விபத்தில் இறைச்சி வாங்க நின்றிருந்தவர் உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-உடுமலை சாலை கொண்டரசன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வருபவர் தமிழரசன் (39). இவர் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் தனது கடையில் இறைச்சி வியாபாரத்தை கவனித்து வந்தார்.



அப்போது தளவாய்பட்டினம் இருந்து தாராபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த (மாருதி 800) கார், இருசக்கர வாகனத்தின் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சிக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சென்ற தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காரை ஓட்டி வந்தவர் தளவாய்பட்டினத்தை அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பதும், இவர் தாராபுரத்தை நோக்கி காரில் வந்து கொண்டிருக்கும்போது கொண்டரசம்பாளையம் பகுதியில் சேர்ந்த அருணகிரி (55) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் இறைச்சி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இவ்விபத்தில் இறைச்சிக் கடையின் உரிமையாளர் தமிழரசன்(39), கடையில் பணியாற்றி வந்தவர் மீதுன்பாலாஜி(17), இறைச்சி வாங்குவதற்காக கடையில் நின்று கொண்டிருந்தவர் பிரகாஷ்(38) ஆகியோர் காயமடைந்தனர்.



தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிரகாஷ் தாராபுரம் அரசு மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



மேலும் படுகாயம் அடைந்த தமிழரசன், மிதுன்பாலாஜி, அருணகிரி, செல்வராஜ் ஆகியோருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மேற்கொண்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் இறைச்சி கடைக்குள் புகுந்த காட்சிகளை வைத்து போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...