கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; நிர்வாக அதிகாரி விளையாட்டு ஆசிரியர் கைது

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோபள்ளியில் பாலியல் தொல்லை புகாரில் 2 ஊழியர்கள் கைது செய்யபட்டனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில்ஸ்ரீ சைதன்யா டெக்னோ என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நேராக பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மதியழகன், கல்பனா ஸ்ரீதர், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வி, ஆகியோர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளியின் நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் கணபதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் காரமடை வெள்ளியங்காட்டைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

மேலும் மாணவிகளிடம் இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் உங்களின் பெற்றோரிடம் உங்களைப் பற்றி தவறாக கூறி விடுவோம் என்று கூறி மிரட்டியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்துமகளிர் காவல்துறையினர், உடனடியாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...