கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; நிர்வாக அதிகாரி விளையாட்டு ஆசிரியர் கைது

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோபள்ளியில் பாலியல் தொல்லை புகாரில் 2 ஊழியர்கள் கைது செய்யபட்டனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில்ஸ்ரீ சைதன்யா டெக்னோ என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நேராக பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மதியழகன், கல்பனா ஸ்ரீதர், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வி, ஆகியோர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளியின் நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் கணபதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் காரமடை வெள்ளியங்காட்டைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

மேலும் மாணவிகளிடம் இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் உங்களின் பெற்றோரிடம் உங்களைப் பற்றி தவறாக கூறி விடுவோம் என்று கூறி மிரட்டியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்துமகளிர் காவல்துறையினர், உடனடியாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...