கறிக்கோழி விற்பனை சரிவடைவதால், கொள்முதல் விலை சரியும் பண்ணையாளர் அச்சம்

புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை சரிந்து வருவதால் கொள்முதல் விலை விழ்ச்சி அடையும் ஆபத்து இருப்பதாக கோவை, திருப்பூர், ஈரோடு கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்


கோவை: கறிக்கோழி விற்பனை சரிவு கோழி பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில், கறிக்கோழி பண்ணைகள் மூலம், வாரம் ஒரு கோடி கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும், வாரம், 50 லட்சம் கோழிக்குஞ்சுகள் விற்பனையாகி வருகின்றன.

கேரளாவில், தொடர் மழை காரணமாக, 20 சதவீதம் வரை கறிக்கோழி விற்பனை சரிவடைந்து வருகிறது. இதுதவிர, விழாக்கள், பண்டிகைகள் காரணமாகவும் விற்பனை குறைந்துள்ளது. தமிழகத்தில், புரட்டாசி மாதம் என்பதால், அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவும் விற்பனை குறைவதற்கான காரணமாக உள்ளது.தற்போது, கொள்முதல் விலை, கிலோ 108 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்துள்ளதால், அதற்கு ஏற்ப உற்பத்தியும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவு காரணமாக, வரும் நாட்களில் கொள்முதல்விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போதுள்ள தீவன விலை, ஆள் கூலி, வண்டி வாடகை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கறிக்கோழிகளின் அடக்க விலை, 100 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. கொள்முதல் விலை மேலும் குறைந்தால், பண்ணையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர் அச்சம் தெரிவித்தார்

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...