‌‌ யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமியின் வைரல் வீடியோ காட்சிகள்

கோவை பேரூர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யானைகள் பற்றி நேயா என்ற பள்ளி மாணவி பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரவேற்பை பெற்று வருகிறது.


கோவை: யானையை நாம் பாதுகாக்க வேண்டும். யானை காட்டை உருவாக்குகிறது. காடு நன்றாக இருந்தால் மற்ற விலங்குகள் நன்றாக இருக்கும் என்று பேசிய பள்ளி மாணவி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை உறுதிமொழியும் எடுக்க வைத்தார்.

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார் பள்ளி மாணவி யானைகளைப் பற்றி அபாரமாக பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் விநாயகரை கும்பிடுவோம். விநாயகர் யானை ரூபம் கொண்டவர். யானையை நாம் பாதுகாக்க வேண்டும். யானை காட்டை உருவாக்குகிறது. காடு நன்றாக இருந்தால் மற்ற விலங்குகள் நன்றாக இருக்கும். மற்ற விலங்குகள் நன்றாக இருந்தால் பறவைகள் அனைத்தும் நன்றாக இருக்கும். பறவைகள் நன்றாக இருந்தால் மழை பெய்யும். நன்றாக மழை பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும்.

விவசாயம் இருந்தால் சாப்பாடு நமக்கு கிடைக்கும். சாப்பாடு இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆகவே யானை நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து யானைகள் பாதுகாப்போம் என தெரிவித்தார்.யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதி மொழியையும் எடுக்க வைத்துள்ளார். தற்போது அச்சிறுமி பேசிய காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...