‌குடிநீர் பற்றாக்குறை - திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை

உடுமலை அருகே நிலவும் கடும் வறட்சியை தடுக்க திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிடுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: குடிநீர் பற்றாக்குறை தடுக்க திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் உடுமலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்

உடுமலை அடுத்த ஆலம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் பூசாரிநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து மானுப்பட்டி கால்வாய் மூலமாக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் 10 க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் இருப்பு உயர்வதுடன் 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தளி வாய்க்கால் மூலம் பாசனம் பெருகின்ற ஏழு குளங்களுடன் இந்த ஏரியையும் சேர்த்து தண்ணீர் வழங்கலாம் என்று கடந்த 2008 -ம் ஆண்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் பூசாரிநாயக்கன் ஏரிக்கு நீர் இருப்பு ஏற்றவாறு 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர்இருப்பு பாதிப்பு அடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் சாகுபடி பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து குறிச்சிக்கோட்டை கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக முறையான அரசாணை பெற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பூசாரிநாயக்கன் ஏரியை ஆதாரமாகக் கொண்ட பகுதியில் கடும் வறட்சி நிலவுவதுடன் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரிக்கு அரசு உத்தரவுப்படி தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...