சென்னையில் ஆசிரியர்கள் கைதுக்கு எதிர்ப்பு - கோவையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்துள்ளதாக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் கைது நடவடிக்கை கண்டித்தும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு முன்பு தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சென்னையில் பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறை துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தராஜ், சுதாகர், விக்டோரியா, அருணா, கிருத்திகா உள்பட 250 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...