தாராபுரம் நகரில் வாய்க்காலில் கழிவுகளை கொட்ட வேண்டாம் - பொதுமக்களுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டுவதால் அடைப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டி வருவதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மதகுகள் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் உள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் நகரின் மத்திய பகுதியின் வழியாக அமராவதி ராஜ வாய்க்கால் ஓடிக் கொண்டுள்ளது. இதன் மூலம் ராஜ வாய்க்காலில் இருந்து விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை ராஜ வாய்க்காலில் கொட்டி செல்கின்றனர். இதனால் ராஜ வாய்க்காலில் மதகுகளில் தண்ணீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டு விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் சீராக செல்லாமல் தடைபட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மக்காத பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பாட்டில்கள் விவசாய விளை நிலத்தை பாதிக்கின்றன. எனவே மக்கள் இதனை கருத்தில் கொண்டு ராஜ வாய்க்காலில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...