தாராபுரத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பள்ளி மாணவி கடத்தல் - போக்சோவில் ஆட்டோ ஓட்டுநர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெங்களூரு கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மனைவிகள் பிரிந்து சென்றது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மளிகை பொருட்கள் விற்பனை செய்து வந்த உரிமையாளரின் 15-வயது மகள் கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்து மளிகை பொருட்கள் விற்பனையாளர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த மாணவி பள்ளிக்கு அழைத்தும் செல்லும் ஆட்டோ ஓட்டுனரையும் காணவில்லை என விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசாருக்கு கடந்த 20 நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த ஆட்டோ ஓட்டுனர், மாணவியுடன் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு பேரையும் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைதது வந்து விசாரணை நடத்திய போது ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மாணவியை கடத்தி சென்றவர், தாராபுரம் சின்னகாளியம்மன் கோவில் மேற்கு கச்சேரி வீதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தவசி (23) என்பதும்,மாணவியை தினசரி ஆட்டோவில் ஏற்றி சென்று திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தநேரத்தில், குடும்ப கதையை சொல்லி மாணவியிடம் பழக்கம் ஏற்படுத்தி கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக 2-மனைவிகள் பிரிந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் தவசியை தாராபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...