தாராபுரத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பள்ளி மாணவி கடத்தல் - போக்சோவில் ஆட்டோ ஓட்டுநர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெங்களூரு கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மனைவிகள் பிரிந்து சென்றது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மளிகை பொருட்கள் விற்பனை செய்து வந்த உரிமையாளரின் 15-வயது மகள் கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்து மளிகை பொருட்கள் விற்பனையாளர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த மாணவி பள்ளிக்கு அழைத்தும் செல்லும் ஆட்டோ ஓட்டுனரையும் காணவில்லை என விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசாருக்கு கடந்த 20 நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த ஆட்டோ ஓட்டுனர், மாணவியுடன் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு பேரையும் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைதது வந்து விசாரணை நடத்திய போது ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மாணவியை கடத்தி சென்றவர், தாராபுரம் சின்னகாளியம்மன் கோவில் மேற்கு கச்சேரி வீதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தவசி (23) என்பதும்,மாணவியை தினசரி ஆட்டோவில் ஏற்றி சென்று திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தநேரத்தில், குடும்ப கதையை சொல்லி மாணவியிடம் பழக்கம் ஏற்படுத்தி கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக 2-மனைவிகள் பிரிந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் தவசியை தாராபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...