உடுமலையில் கல்விக் கடன் வழங்க கோரி சென்ட்ரல் பேங்க் முன்பு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

உடுமலையில் மாணவனுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த சென்ட்ரல் வங்கி முன்பு, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: கல்விக் கடன் வழங்காமல் ஒருவடத்திற்கு மேல் அலைக்கழித்துள்ளதால் மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணம நாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்த அமுத பாரதி என்ற மாணவன் கோவை கற்பகம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்விக் கடன் கேட்டு உடுமலையில் உள்ள சென்ட்ரல் வங்கியில் விண்ணப்பித்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் வங்கி நிர்வாகம் இன்று போய் நாளை வா இன்று போய் நாளை வா என தொடர்ந்து அலைக்கழித்துள்ளது.

இதனால் அந்த மாணவன் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.



இந்த நிலையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோருடன் 50க்கும் மேற்பட்டோர் சென்ட்ரல் வங்கியின் முன்பு கல்விக்கடன் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஒரு வருடத்துக்கு மேலாக கல்வி கடன் வழங்காமல் வங்கி நிர்வாகம் மாணவனுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே கல்விக்கடன் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...