வால்பாறையில் கோவில் கட்டிடங்கள், கொய்யா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட்டில் உள்ள 10 ஏக்கரா பகுதியில் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து தோட்டத்தில் இருந்த கொய்யா மரங்களை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களை இடித்து தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டது.


கோவை: குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் அவற்றை விரட்ட வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வனத்துறையினரை கேட்டுக்கொண்டனர்.



வால்பாறை அருகே முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களையும் குடியிருப்பு அருகில் உள்ள கொய்யா மரங்களையும் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தயது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் தோட்டங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது.

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 10 ஏக்கரா பகுதியில் இரண்டு காட்டு யானைகள் பட்டப்பகலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகில் உள்ள தோட்டத்தில் கொய்யா மரத்தை உடைத்து பழங்களை சாப்பிட்டு கொய்யா மரத்தை வேரோடு தள்ளியது.



அதேபோல் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் செட் ஆகியவைகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...