உடுமலையில் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா - ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: அரசுப்பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து மரம் நடும் விழா துங்கவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் நடப்பட்டது. இந்த விழாவில் மரங்கள் நடுவதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்து கூறப்பட்டது.

மரங்களால் காற்று மாசுபாடு குறையும் எனவும் மரம் அதிகமாக இருந்தால் மழை பொழியும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழவும், அடுத்த தலைமுறை நல்ல காற்றோடு வாழவும் மரங்களே நமக்கு உதவும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன், மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...