முன்னறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்ட உடுமலை தபால் நிலையம் - பொதுமக்கள் முற்றுகை

உடுமலையில் இயங்கிவந்த தபால் நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் உள்ள தபால் அலுவலகம் இட மாற்றம் செய்ய பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட எரிப்பாளையம் வீஜிராவ் நகர் பகுதியில் கடந்த 42 ஆண்டுகளாக இயங்கி வந்த தபால் நிலையம் எந்தவித முன்னறிவிப்பின்றி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அய்யலுமீனாட்சி மீனாட்சி நகருக்குஇடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதற்கிடையில் தபால் நிலையத்தை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை தலைமை தபால் நிலையத்தை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீஜிராவ் நகர் தபால் நிலையத்தில் சுமார் 2000 பேர் நிரந்தரக் கணக்கு 1300 க்கு மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு 5000 பேர் டெபாசிட் செய்திருப்பதாகவும் மாதத்திற்கு ஒரு கோடிக்கு மேல் பணம் வர்த்தகம் நடைபெறும் நிலையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தபால் நிலையத்தில் ஓய்வு ஊதியர்கள் வயது முதிர்ந்தவர்கள் அதிக அளவு கணக்கு வைத்து உள்ள நிலையில் தற்பொழுது இரண்டு கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது எனவே தபால் நிலையத்தை மீண்டும் இதே பகுதியில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தபால் துறை அதிகாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது தங்களது கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததால் தற்காலிகமாக பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். உடுமலை தலைமை தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...