பொதுமக்கள் சரமாரி கேள்வி - சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் சிறு கிணறு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சமை கூட்டத்தில் கிராம மக்கள் சரமாரி கேள்வி கேட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


திருப்பூர்: டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி கேட்டதால் கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் கிளம்பிச் சென்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ள சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டால் மட்டுமே கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில் கிராமத்தில் உட்பட்டவர்களை கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கின்றனர்.

ஆனால், 50க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து நொச்சிப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைவர் செல்லமுத்துவிடும் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டனர். அதேபோன்று அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெரு விளக்கு, குப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்வதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதில் கூற முடியாத ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து கூட்டத்திலிருந்து பாதியிலேயே இருந்து சென்றார். அதன் பின் அதிகாரிகள் போதிய அளவு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காலதால் கிராம சபை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...