தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை உறுதி மொழி

மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட வேண்டும் என்று தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்:நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட, மத நல்லிணக்கம் பேணிட, சாதி, சமயம், பேதமற்ற சம உலக சமத்துவம் படைத்திட அரசு ஊழியர்கள் மக்கள் ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என்று மக்கள் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கும் கூட்டம், தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.



அப்போது அரசு ஊழியர்கள் நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம், மத ரீதியிலான பாகுபாட்டை உடைத்து எறிவேம் என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து காந்தி பிறந்த நாளில் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்ட கிளை தலைவர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் முருக சாமி உள்ளிட்ட மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...