சுக்கம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் - ஊராட்சி நிர்வாகம் சரியில்லை என கிராம மக்கள் உண்ணாநிலை

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வரவு என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், டிஎம்எஸ் காலனி, ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஊராட்சி நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை எனவும், ஊராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனவும் கடந்த இரண்டு வருடங்களில் குடிநீர் குழாய்களை பராமரிப்பதற்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற விதத்தில் இரண்டு வருடத்தில் 34 லட்சம் ரூபாய்க்கு பணம் செலவாகியிருப்பதாக ஊராட்சி நிர்வாகம் கணக்கு காட்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...