சுக்கம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் - ஊராட்சி நிர்வாகம் சரியில்லை என கிராம மக்கள் உண்ணாநிலை

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வரவு என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், டிஎம்எஸ் காலனி, ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஊராட்சி நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை எனவும், ஊராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனவும் கடந்த இரண்டு வருடங்களில் குடிநீர் குழாய்களை பராமரிப்பதற்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற விதத்தில் இரண்டு வருடத்தில் 34 லட்சம் ரூபாய்க்கு பணம் செலவாகியிருப்பதாக ஊராட்சி நிர்வாகம் கணக்கு காட்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...