உங்கள் டி.ஆர்.பிக்கு நான் அரசியல் பேசவேண்டுமா? - செய்தியாளர்களிடம் சீறிய அண்ணாமலை

உள்ளுர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் என கோவையில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பாரதப் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கோவையில் பாஜகவினர் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோவில்பாளையம் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.



கையில் கடப்பாரை பிடித்து குழி தோண்டி மரக்கன்றுகளை நடவு செய்த அண்ணாமலை, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் இணைந்து தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.



முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று நாடு முழுவதும் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் எனவும் இதை தொடர்ந்து கதர் ஆடைகளை வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நான்காயிரம் கோடி என இருந்த காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டதாகவும் எனவே உள்ளூர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஒரு மணி நேரம் எந்த புகைப்படமும் செல்ஃபியும் இல்லாமல் அனைவரும் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அவரிடம் டெல்லி பயணம் குறித்தான கேள்விக்கு உங்கள் டிஆர்பி ஏற்றுவதற்கு நான் எதற்கு அரசியல் பேச வேண்டும் கூறி சென்றார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...