வனப்பகுதிக்குள் தானியங்கி கேமிராக்கள் - அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை

வனப்பகுதிக்குள் உள்ள விலங்குகளின் பாதுகாப்பு கருதி அத்துமீறி நுழைபவர்களை கண்காணித்து அறிக்கை அளிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் அந்நியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா அறிவுரையின் படி வனத்துறை அதிகாரிகள் மூக்குருத்தி தேசிய பூங்கா வனச்சரகத்துக்குட்பட்ட முக்குருத்தி, தெப்பக்காடு, மற்றும் நிலக்கோடு பகுதிகளில் அதிரடியாக ரோந்து பணிக்கு சென்றனர்.

நாடுகாணி, கொலாரிப்பேட்டை, வெஸ்டன் கேட்ச்மென்ட், முக்குருத்தி உச்சிமுனை ஆகிய 4 வழித்தடங்களில் ஆயுதம் ஏந்திய ஜீப் மூலம் சென்று ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகம்-கேரளா எல்லை பகுதியில் உள்ள நாடு காணி, முக்குருத்தி தேசிய பூங்கா வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கொலாரிபேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அந்நியர்கள் பிரவேசம் உள்ளதா என்பவை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தினந்தோறும் சிறப்பு தணிக்கை நடத்தி தெப்பக்காடு புலிகள் கண்காணிப்பு மைய அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஊட்டி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் அந்நியர்கள் அத்துமீறி நுழையக்கூடாது எனவும் அப்படி நுழைந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...