உடுமலை பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை - தாய்மார்கள் தவிப்பு

உடுமலை பேருந்து நிலையத்தில் எப்போதும் பாலூட்டும் அறை பூட்டியே கிடப்பதால், குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


திருப்பூர்: பூட்டி இருக்கும் பாலூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பயணியர் செல்கின்றனர். இதில், உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கும், மூணார் வரை குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்களும் அதிகம் உள்ளனர்.அடிப்படை வசதிகள் பஸ் ஸ்டாண்டில் இருந்தும், பயன்படுத்த முடியாமல் இருப்பது பலருக்கும் மனவேதனை அளித்து வருகிறது.

பஸ் ஸ்டாண்டில், பாலுாட்டும் தாய்மார்களுக்கென தனி அறை உள்ளது. இந்த அறை எப்போதும் பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பசியாற்ற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்யும் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளின் பசியாற்ற இடம் தேடி கடைகளில் அனுமதி கேட்கும் அவலத்தில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...