அதிமுக கூட்டணி முறிந்த விவகாரம் - திருப்பூரில் பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

அதிமுகவினர் கூட்டணியை முறித்துக்கொண்டதை திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: அதிமுக கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது என்றும், தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே கடந்த சில தினங்களாகவே முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில் , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-பாஜக கூட்டணி முடிவுற்றதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் இதுவரை கூட்டணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதனை தொடர்ந்து பேசிய பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் இந்த கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும். அதிமுகவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றிய தொண்டர்கள் 2 பேர் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...