அதிமுக கூட்டணி முறிந்த விவகாரம் - திருப்பூரில் பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

அதிமுகவினர் கூட்டணியை முறித்துக்கொண்டதை திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: அதிமுக கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது என்றும், தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே கடந்த சில தினங்களாகவே முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில் , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-பாஜக கூட்டணி முடிவுற்றதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் இதுவரை கூட்டணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதனை தொடர்ந்து பேசிய பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் இந்த கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும். அதிமுகவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றிய தொண்டர்கள் 2 பேர் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...