அதிமுக கூட்டணி முறிந்த விவகாரம் - திருப்பூரில் பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

அதிமுகவினர் கூட்டணியை முறித்துக்கொண்டதை திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: அதிமுக கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது என்றும், தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே கடந்த சில தினங்களாகவே முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில் , முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-பாஜக கூட்டணி முடிவுற்றதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் இதுவரை கூட்டணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதனை தொடர்ந்து பேசிய பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் இந்த கூட்டணி பிரிவு வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பாஜக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும். அதிமுகவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றிய தொண்டர்கள் 2 பேர் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...