இழப்பீடு தொகை கோரி தரையில் உருண்டு புரண்ட விவசாயிகள் - தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிக்காக நிலத்தை வழங்கிய விவாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750-ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000-ஆம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்கப்பட்டது.

விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகளிடம் கூறியவாறு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால் இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் இறந்துவிட்டனர்.



இருப்பினும் தற்போது உள்ள 150-விவசாயிகள் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் கடந்த 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று 45-ஆவது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகள் தரையில் உருண்டு பிரலும் போராட்டம் ஈடுபட்டனர்.

Newsletter

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...