இழப்பீடு தொகை கோரி தரையில் உருண்டு புரண்ட விவசாயிகள் - தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிக்காக நிலத்தை வழங்கிய விவாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750-ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000-ஆம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்கப்பட்டது.

விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகளிடம் கூறியவாறு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால் இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் இறந்துவிட்டனர்.



இருப்பினும் தற்போது உள்ள 150-விவசாயிகள் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் கடந்த 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று 45-ஆவது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகள் தரையில் உருண்டு பிரலும் போராட்டம் ஈடுபட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...