வால்பாறையில் மாலை தொடங்கி இரவு வரை கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் இரவு நேரத்திலும் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.



கோவை: விநாயகர் சதூர்த்தி திருவிழாவையொட்டி இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.



அவ்வாறு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, சிலைகள் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



அப்போது வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு வால்பாறை பிரதான சாலை வழியாக ஆடல், பாடல், நடனமாடி சிலைலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



இரவு 9 மணி அளவில் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள, ஆற்றில் கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...