ரூ. 2 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கியது உடுமலை தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை!

10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோயில் அரங்கில் நடைபெற்றது.



இதில் பத்தாம் வகுப்பில் 11 பேருக்கும், 12-ம் வகுப்பில் 6 பேருக்கும் கல்வி பரிசளிப்பாக சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் , கல்வி உதவித்தொகையாக 15 பேருக்கு சுமார் 2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.



மேலும் 75 வயதைக் கடந்த 32 முதியோர்களுக்கு கௌரவம் செய்து நினைவு பரிசு வழங்கினர்.



பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் முத்தோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாங்கர் சமூக சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மாணிக்கம், மெடிக்கல் திருமலை சாமி, சீனிவாசன் சௌந்தர்ராஜன் ஞானமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...