சூலூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி - ஆகழ்வாராய்வு பணியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே கிடைத்த எலும்பு கூடுகள் நிறைந்த முதுமக்கள் தாழியை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் கடந்த 60 வருடங்களாக அப்பகுதியில் வசித்து வருகிறார்.



பழைய வீடாக இருந்த அவருடைய வீட்டை புதுப்பித்து புதிய வீடு கட்டி வருகிறார். அதற்காக குடிநீர் தொட்டி தோண்டும் போது தோண்டப்பட்ட இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை எடுத்த பொன்னுச்சாமி இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் தொல்பொருள் ஆராய்ச்சி அலுவலர்களிடமும் தெரிவித்துள்ளார்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த அகழ்வாராய்ச்சி செய்யும் பணியினை மேற்கொண்டனர்.



இந்த முதுமக்கள் தாளியுடன் செப்பு சாமான்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாளியில் இறந்தவரின் எலும்பு கூடுகளும் இருந்துள்ளது.

இதனை தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் கோவையில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். எலும்புகூடுகள் கண்டெடுக்கப்படிருப்பது இப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொன்னுச்சாமி பேசும்போது, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் போது கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பேசும் போது, 2000 ஆண்டு பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதுமக்கள் தாலியை கோவையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி அருங்காட்சியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...