மின்வாரியம் சார்பாக சிறப்பு முகாம் - காலநீட்டிப்பு வழங்க பொதுமக்கள் கோரிக்கை

கோவையில் மின்சார வாரியம் சார்பாக நடைபெறும் மின் இணைப்பு, பெயர் மாற்றும் சிறப்பு முகாமை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வீடு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தும் வசதி உள்ள நிலையில், பொதுமக்கள் நலனுக்காக அலுவலகத்தில் கட்டணம் செலுத்திய அன்றே பெயர்மாற்றம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது.

ஒரு மாதம் நடந்த இந்த சிறப்பு முகாம் காலநீட்டிப்பு செய்யப்பட்டது. மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் ஆதார் அட்டை, சொத்து வரி ரசீது நகல், விற்பனை பத்திர நகலை வைத்து பெயர் மாற்றம் செய்துவந்தனர்.

மின் இணைப்பு அட்டையில் பெயர் உள்ளவர்கள் இறந்து விட்டால் பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ், செட்டில்மென்ட் பத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதம் துவங்கப்பட்ட இந்த சிறப்பு கால நீட்டுப்பு செய்யப்பட்டு இன்றுடன் முடிவடையும் நிலையில் முகாமுக்கான அவகாசத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாதம் கிருஷ்ணர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை என தொடர்ந்து வந்ததால் பலரும் இந்த சிறப்பு முகாமில் முழுமையாக பயன்பெற முடியவில்லை எனவும் எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு முகாமை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...