திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்ட்டடத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணமலை மாற்றுதிறனாளிகள் 30 பேருக்கு இலவச சக்கர சைக்கிள் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள புதிய நவக்கொம்பு பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரைக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.
அரவிந்த் தோட்டத்திற்கு வந்த அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு 30 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை இலவசமாக வழங்கினார்.
மேலும் பொதுமக்களுக்கு நல திட்டங்களை வழங்கி சிறப்புரைத்தார்.
நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்குகினார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ருத்ரகுமார், அமெரிக்கவாழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாட்டு துரை, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் உலகநாதன், ருத்ராவதி பேரூராட்சி கிழக்கு ஒன்றிய பாஜக மகளிர் அணி தலைவர் கண்ணம்மாள், நான்காவது வார்டு கவுன்சிலர் பாலதண்டபாணி, 5 வது வார்டு கவுன்சிலர் கௌரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.